அக்கா மகளின் காதல் திருமணத்தில் ஏற்றுக்கொண்ட ஆத்திரத்தில், வரவேற்பு விருந்தில் தாய்மாமன் விஷம் கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டம் உட்ரே கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கு, இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த விஷியம் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து, இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த பெண்ணும் இளைஞரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தனர். சிறிது நாட்கள் கழித்து இவர்களது திருமணத்தை பெற்றொர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இருப்பினும் அக்கா மகளின் காதல் திருமணத்திற்கு தாய்மாமனான மகேஷ் பாடில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், பெற்றோர்கள், காதல் ஜோடிக்கு ஊர் மக்கள், உறவினர்களை அழைத்து கடந்த 7ம் தேதி வரவேற்பு விருந்து ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தாய் மாமன் மகேஷ், உணவில் விஷம் கலந்ததாக கூறப்படுகிறது. இதனை அருகில் மண்டபத்தில் இருந்தவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனிடையே, அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். மேலும், உணவில் விஷம் கலக்கப்பட்டதை அறிந்ததால், விருந்தினர் யாரும் உணவை சாப்பிடவில்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அம்மாநில போலீசார், மகேஷ் பாடில் மீது விஷப் பொருட்களை அலட்சியமாக கையாண்டதற்காகவும், பொது மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டதாகவும் சட்டப்பிரிவு 286 மற்றும் 125 கீழ் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மகேஷை தேடி வருகின்றனர்.

Readmore: ”இனி பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை”..!! பெண்ணை பின்தொடர்ந்து சென்றால் 5 ஆண்டுகள் சிறை”..!! தமிழ்நாடு அரசு அதிரடி..!!