சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே தங்கும் விடுதியில் இருந்து அழுகிய நிலையில் முதியவர் சடலம் கைப்பற்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகை மாவட்டத்தை சேர்ந்தவர் மனோகர்(62). மல்டிலெவல் மார்க்கெட்டிங்’ தொழில் செய்து வரும் இவர், சில நாட்களுக்கு முன், பணிநிமித்தமாக சேலம் வந்ததாக தெரிகிறது. இதனால், பள்ளப்பட்டி பி.எம்.ஆர்., நகரில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினார். இந்தநிலையில், கடந்த 4 நாட்களாக, அவரது அறை திறக்கப்படாத நிலையில், நேற்று துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து, விடுதி நிர்வாகம் அளித்த தகவலின்படி, பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதையடுத்து, கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, அழுகிய நிலையில் மனோகர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, மனோகரின் உறவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும், இவரது மரணம், கொலையா? தற்கொலையா?. முன்விரோதத்தால் நடந்த சம்பவமா, குடும்ப பிரச்சனை காரணமா உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.