சேலம் கெங்கவல்லி பகுதியில் வங்கி ஒன்றில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் போலி நகைகளை அடகு வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் பொதுத்துறை வங்கியான கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஆத்தூரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரது மகன் பாலச்சந்தர் (45), நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கியில், பிற வங்கியின் நகை மதிப்பீட்டாளர் வங்கியில் வைக்கப்பட்டுள்ள நகைகளை ஆய்வு மேற்கொண்டார். அடைமானம் வைக்கப்பட்ட நகைகளை ஆய்வு செய்ததில் அவை தங்க நகைதானா? என சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, நகைகளை முறைப்படி பரிசோதனை செய்ததில், கூடமலையைச் சேர்ந்த சேகர் மற்றும் பழனிச்சாமி ஆகியோரது வங்கிக் கணக்கில் 84 சவரன் வைக்கப்பட்டிருந்ததது கவரிங் எனத் தெரியவந்துள்ளது.

வாடிக்கையாளர்கள் அடைமானம் வைத்த தங்க நகைகளுக்குப் பதிலாக கவரிங் நகைகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இதன் மூலம் 41 லட்சம் ரூபாய் கையாடல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வங்கி மேலாளர் மித்ராதேவி அளித்த புகாரின் அடிப்படையில், நகை மதிப்பீட்டாளர் பாலச்சந்தரை கைது செய்த கெங்கவல்லி போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Readmore: அடிதூள்!. இனி பட்டாவும் வரைபடமும் ஒரே நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம்..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!