இந்திய ரயில்வேயில் அமைச்சுப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 1036 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.02.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது இப்பணியிடங்களுக்கு கடந்த ஜனவரி 7ம் தேதி முதல் விண்ணப்பங்கள் தொடங்கிய நிலையில் விண்ணப்பிக்க வரும் பிப்ரவரி 16ம் தேதிவரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
POST GRADUATE TEACHER, CHIEF LAW ASSISTANT, PUBLIC PROSECUTOR, PHYSICAL TRAINING INSTRUCTOR, TRAINED GRADUATE TEACHER, JUNIOR TRANSLATOR, STAFF AND WELFARE INSPECTOR, LIBRARIAN, PRIMARY RAILWAY TEACHER, LABORATORY ASSISTANT உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், முன்னாள் ராணுவத்தினர்கள் ரூ.250 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் RRB-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும். முகப்புப் பக்கத்தில் கிடைக்கும் RRB அமைச்சக & தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆட்சேர்ப்பு 2025 இணைப்பைக் கிளிக் செய்யவும். விண்ணப்பதாரர்கள் பதிவு விவரங்களை உள்ளிட வேண்டிய புதிய பக்கம் திறக்கும். சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்து பக்கத்தில் உள்நுழையவும்.விண்ணப்பப் படிவத்தை நிரப்பி விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும். சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்து பக்கத்தைப் பதிவிறக்கவும்.
Readmore: புது ரூல்ஸ் போட்ட ஆர்பிஐ!. ATM-ல் இந்த சேவைகளுக்கெல்லாம் கட்டணம் உயர்வு!. வெளியான அறிவிப்பு!