கணவன், மனைவி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மீரட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், மீரட் லிசாடி கேட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சோஹைல் கார்டன் பகுதியை சேர்ந்தவர்கள் மொயின்-அஸ்மா தம்பதி.அவர்களது மூன்று மகள்கள் அஃப்சா (8), அஜிசா (4), மற்றும் அதிபா(1). கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார் மொயின். இந்தநிலையில், கடந்த புதன் கிழமை இரவு முதல் மொயின் வீடு பூட்டப்பட்டிந்ததாகவும் யாரும் வெளியில் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கதினர், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற போலீசார், வீட்டின் கதவை உடைத்து திறந்து பார்த்தனர். அப்போது, தம்பதிகள் இருவரும் தரையில் கொலை செய்யப்பட்டு சடலங்களாக கிடந்தனர். மேலும் படுக்கை அறையில் சென்று பார்த்தப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டி ஒன்றில் இவர்களது 3 குழந்தைகளும் சாக்கு பையில் மூடப்பட்டு சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இவர்களின் கொலைக்கு சரியான காரணம் இன்னும் தெரியாத நிலையில், அனைவரது உடல்களிலும் காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தடயவியல் நிபுணர்களை வரவழைத்து ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டப்பின் 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.முன் விரோதம் உள்ளிட்டவைகளால் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்ற பல்வேறு கோணங்களின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சரியான காரணம் உறுதி செய்யப்படும் என்றும் மீரட் எஸ்எஸ்பி தெரிவித்தார்.

Readmore: காணாமல் போனவரின் நிலத்தை ஆக்கிரமித்து பட்டா பெற முடியுமா?. இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்!