பெருந்துறை அருகே பேட்டரி லோடுகளை ஏற்றி சென்ற லாரி திடீர் தீப்பிடித்து எரிந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பேட்டரிகள் எரிந்து சேதமாகின.

புனேவில் இருந்து பேட்டரி லோடு ஏற்றி கொண்டு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு கொண்டு செல்வதற்காக லாரி ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது இன்று காலை சேலம்-கோவை தேசிய நெருஞ்சாலையில் பெருந்துறை அருகே பெத்தாம் பாளையம் பிரிவு என்ற இடத்தில் சென்ற பொழுது திடீரென லாரி தீ பற்றியது. உடனடியாக சுதாரித்து கொண்ட ஓட்டுநர் ஏழுமலை லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளார்.

பின்னர், லாரி மளமளவென பற்றி முழுமையாக ஏறிய தொடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பெருந்துறை தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் லாரியில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பேட்டரிகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. தீ விபத்துக்கான கரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டீசல் டேங்கில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

Readmore: எடப்பாடி பேருந்து நிலைய கட்டுமான பணிகளில் தொய்வு!. போக்குவரத்து நெரிசல்!. மக்கள் கடும் அவதி!