சேலத்தில் ஒரே பெண்ணுக்காக இரண்டு இளைஞர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வீமனூர் காட்டுவளவை சேர்ந்தவர் குமரவேல்(29). டெம்போ டிரைவரான இவர், கருத்துவேறுபாடு காரணமாக காதல் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில், அதே பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் குமரவேலுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் அடிக்கடி வெளியே வெளியே சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இருப்பினும் திடீரென அந்த பெண் குமரவேலுவுடனான உறவில் இருந்து விலகிவந்துள்ளார்.

ஏனென்றால், அந்த பெண்ணுக்கு வீராணம் துளசிமணியனூரை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகிவந்துள்ளார். இதனால் பிரகாஷ் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமரவேல், பிரகாஷையும், அந்த பெண்ணையும் கண்டித்துள்ளர். ஒருகட்டத்தில் இளைஞர் இருவருக்குமிடையே பலமுறை தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதன்படி, சம்பவத்தன்று குமரவேல், துளசிமணியனூர் அய்யனாரப்பன்கோயில் அருகே மது அருந்தி கொண்டிருந்துள்ளார்.

அங்கு நண்பர்களுடன் சென்ற பிரகாஷ் குமரவேலுவை சரமாறியாக அடித்து கீழே தள்ளி, கத்தியால் அவரது கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு தப்பியோடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வீராணம் போலீசார், வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய பிரகாஷ், மாணிக்கம், கனகராஜ், ஆகிய 3 பேரையும் இரவோடு இரவாக கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட பிரகாஷ் ரவுடி என்றும் அவர் மீது அடிதடி, வழிப்பறி, கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் ஏற்கனவே இவர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Readmore: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு எழுதப்போறீங்களா!. ஹால் டிக்கெட் ரிலீஸ்!. ஆன்லைனில் உடனே பிரிண்ட் அவுட் எடுக்க சிம்பிள் டிப்ஸ்!