திருமணத்திற்கு மறுத்த பெண்ணை பழிவாங்குவதாக நினைத்து, இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோக்களை உறவினர்களுக்கு அனுப்பி வைத்த போக்குவரத்து காவலர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை கோயம்பேடு போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்த். இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் குழந்தைகள் இல்லாததால், மனைவியை விவாகரத்து செய்தார். இதைத்தொடர்ந்து, 2-வதாக ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதனால், ஆனந்தும் அந்த பெண்ணும் பழகி வந்துள்ளனர். அப்போது தான், ஆனந்தின் சுயரூபம் அவருக்கு தெரியவந்தது. ஆனந்த் குடிபோதையில், குடியிருப்பு வாசிகளிடம் தகராறு செய்வதும், வீடுகள் மற்றும் வாகனங்களை அடித்து உடைப்பதும், பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதும் வெளிச்சத்திற்கு வந்தது. இதன் காரணமாக ஆனந்தை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். மேலும், அவர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதனால், 2-வதாக திருமணம் செய்யவிருந்த பெண் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஜாமீனில் வெளியே வந்த ஆனந்த், அந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அந்த பெண் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த், இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அந்த வீடியோக்களை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள், இதுகுறித்து அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, வீடியோ அனுப்பியது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ’Exam-க்கு டைம் ஆச்சு அண்ணா.. நிறுத்துங்க’..!! நிற்காமல் சென்ற அரசுப் பேருந்து..!! பின்னாலேயே ஓடிய பிளஸ்2 மாணவி..!! அதிர்ச்சி வீடியோ..!!