அரசு மருத்துவமனையில் குறை பிரசவத்தில் பிறந்த தனது குழந்தையை கழிவறையில் அழுத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலுார் மாவட்டம் கண்டராதித்தம் கிராமத்தில் வசித்து வருபவர் வேதியராஜ். இவருக்கு வயது 49. இவருக்கு ஒருவாரமாக, உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அரியலூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு சென்றுள்ளார். பின்னர் வேதியராஜை பார்க்க அவரது மனைவியும், மகள் லாராவும், மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அவர் மகள் லாராவுக்கு வயது 20. வேதியராஜ் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டதால், அவர்கள் இருவரும் அன்றிரவு மருத்துவமனையிலேயே தங்கிவிட்டனர்.
இந்நிலையில், அதிகாலையில் கழிப்பறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு லாரா சென்றாள். ஆனால், 3 மணி நேரமாகியும் அவள் திரும்பி வரவில்லை. அப்போது, மருத்துவமனையில் துாய்மை பணியாளர்கள் கழிப்பறையை சுத்தம் செய்ய சென்றனர். அங்கு லாரா ஆடையில் ரத்த கரையுடன் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், கழிப்பறையில் பார்த்தபோது குழந்தை இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தார். அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர், விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு லாராவிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், லாரா திருமணம் ஆகாமலே எட்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், லாரா கழிப்பறைக்குச் சென்றபோது, குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. பெற்றோருக்கு தெரிந்தால் சிக்கலாகி விடும் என நினைத்து, கழிப்பறை பேஷனுக்குள் பிறந்த குழந்தையின் தலையை வைத்து அழுத்தி கொலை செய்துள்ளார். அப்போது, கால் மட்டும் வெளியே தெரிந்த நிலையில், அதை துப்புரவு பணியாளர் பார்த்து தகவல் கொடுத்தது, விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read More : நினைத்துப் பார்க்க முடியாத கொடூரம்..!! 2 வயது குழந்தைக்கு இப்படி ஒரு நிலைமையா..? நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!!