ஏற்காடு அருகே 7 ஆண்களை ஏமாற்றி பணத்தை பறித்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணின் பெற்றோரை முதல் கணவன் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காடு முருகன் நகரை சேர்ந்தவர் பிரவீனா(37). இவரது கணவன் நிர்மல்குமார். இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் ஆன நிலையில், இவர்களுக்கு 8 வயதில் மகன் உள்ளான். இந்தநிலையில் கடந்த சில வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், பிரவீனா ஹைதராபாத்தில் பிரவீனா தங்கி இருந்து வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், கடந்த 19ம் தேதி இரவு நேரத்தில் மர்மநபர்கள் சிலர் காரில் சென்று, ஏற்காட்டில் உள்ள பிரவீனாவின் தந்தை சாமுவேல், தாய் மனோரஞ்சிதம் ஆகிய இருவரையும் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற ஏற்காடு போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தினர். முதற்கட்ட விசாரணையில் தம்பதியை கடத்தியது பிரவீனாவின் முதல் கணவர் நிர்மல் குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் வாகன சோதனையின்போது, அந்த கும்பலை போலீசார் கையும் களவுமாக பிடித்து தம்பதியை மீட்டனர். அப்போது நிர்மல் குமாரிடம் விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
அதாவது, பிரவீனா விட்டு பிரிந்த பிறகு வேறு வேறு ஆண் நபர்களுடன் பழகியதாகவும் அவர்களையும் ஏமாற்றி ரூ.20 லட்சம் வரை பணம் பறித்து ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து சம்பாதித்து வந்துள்ளார். இதையடுத்து, ஆண் நண்பர்கள் பணத்தை திருப்பித் தரும்படி கேட்டுள்ளனர். இருப்பினும், ஹைதராபாத்தில் வேறு ஒருவரை திருமணம் செய்து செட்டிலானதாக நிர்மல் குமார் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்ததால், அவரது பெற்றோரை கடத்தியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நிர்மல் குமார், முருகானந்தன் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.