சேலத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி விட்டுச் சென்றதால், மனநலம் பாதிக்கப்பட்ட கணவன் பிறப்புறுப்பை வெட்டிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் குள்ளகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். மூட்டை தூக்கும் வேலை செய்து வரும் முருகனுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக முருகனை பிரிந்து அவரது மனைவி மகன்களுடன் சூரமங்கலத்தில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து, முருகனுக்கு சற்று மன நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மனைவி பிரிந்துச்சென்றதால் சம்பவத்தன்று முருகன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது ஆண் உறுப்பை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது வலியால் அலறி துடித்த அவரின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Readmore: கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ரூ.1000 கிடைக்காதா?. இது கட்டாயமில்லை!. தமிழக அரசு விளக்கம்!