ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியின் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக்கி சக மாணவர்கள் சிலர் வீடியோ எடுத்து இணையத்தில் கசிய விட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பாலா என்ற பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் 9ம் வகுப்பு மாணவியும் பயின்று வருகிறார். இந்தநிலையில், கடந்த 10ம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவி, ஓய்வு நேரத்தில் வகுப்பறையில் தனியாக இருந்துள்ளார். இதனை பயன்படுத்திக்கொண்ட சக மாணவர்கள் சிலர், மாணவியின் ஆடைகள் கழற்றி, நிர்வாணமாக்கி துன்புறுத்தலில் ஈடுபட்டனர்.

இதுமட்டுமல்லாமல், அந்த மாணவியை ஆடையின்றி நிர்வாணமாக செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளது. அதனை வைத்து மாணவியை அடிக்கடி மிரட்டி வந்துள்ளனர். இதனால், மாணவி மற்றவர்களிடம் எதுவும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். மீண்டும் கடந்த 16ம் தேதி அந்த மாணவியை நிர்வாணமாக்க துன்புறுத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில், அந்த மாணவர்களின் துன்புறுத்தல் எல்லை மீறிப்போக, மாணவி கத்தி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த ஓடிவந்த ஆசிரியர்களிடம் மாணவி தனக்கு நடந்த அவமானத்தை கூறியுள்ளார்.

மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் குழந்தைகள் நல அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, மாணவியின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Readmore: சமையலில் பிசியாக இருந்த இளைஞர்கள்!. எட்டிப்பார்த்த பெரிய உருவம்!. மிரள வைக்கும் வைரல் வீடியோ!.