தமிழகத்தில் கனமழை காரணமாக ஒகேனக்கலில் காவிரி நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது மழை குறைவால் நீர்வரத்தும் குறைந்து கொண்டு வருகிறது.

காவிரி ஆற்றின் நீர்வரத்து தமிழக-கர்நாடகா பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து மாறுபடுகிறது. நேற்று, தமிழக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், ராசிமணல் ஆகிய இடங்களில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு 6,500 கன அடி நீர் வந்தது. தற்போது மழை குறைந்திருப்பதால், நீர்வரத்து சற்று குறைந்து. தற்போது 6,000 கன அடியாக உள்ளது.

ஆனாலும், மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி போன்ற அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே பரிசல் சவாரி செய்து மகிழ்கிறார்கள். தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றின் அழகையும், அருவிகளில் விழும் தண்ணீரையும் கண்டு சுற்றுலாப் பயணிகள் ரசிக்கிறார்கள்.

Read more தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை தட்டி எழுப்பி கத்தியால் குத்திக் கொன்ற கொள்ளையர்கள்..!! நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்..!!