ஆத்தூர் அருகே தம்மம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட விவகாரத்தில் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி பேரூராட்சியில் 18 வார்டு (திமுக – 13, காங் – 2, அதிமுக – 3) உறுப்பினர்களை கொண்ட இந்த பேரூராட்சியின் தலைவியாக திமுகவைச் சேர்ந்த கவிதாவும், அவரது கணவர் ராஜா வார்டு உறுப்பினராகவும் உள்ளனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தலைவர் கவிதாராஜா முன்னிலையில் திமுக உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒருவர் தண்ணீர் பாட்டிலை கொண்டு தூக்கி எரிந்து தாக்கி கொண்டனர்.

பின்னர், கூட்டத்தை நடத்த விடாமல் பேரூராட்சி தலைவியை பெண் என்றும் பாராமல் அவதூறாக பேசி ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக 3வது வார்டு உறுப்பினர் நடராஜ், 5வது வார்டு உறுப்பினர் வரதராஜன், 13வது வார்டு உறுப்பினர் கலியவரதராஜீ, 17வது வார்டு உறுப்பினர் திருச்செல்வன் ஆகிய நான்கு கவுன்சிலர்களையும் எதிர்வரும் 2 சாதாரண மன்ற கூட்டத்திற்கு இடைநீக்கம் செய்து பேரூராட்சி தலைவர் கவிதா உத்தரவிட்டுள்ளார்.

Read More : நீட் தேர்வால் எடப்பாடி மாணவி மரணம்..!! உங்களுக்கு கொஞ்சமாவது வெட்கம், மானம் இருந்தால் மாணவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்..!! இபிஎஸ் கடும் கண்டனம்..!!