இதுவரை திருமணமாகி, குழந்தை இல்லாதவர்கள் மட்டுமே குழந்தைகளை தத்தெடுக்க முடியும் என்ற விதி இருந்தது. ஆனால், தற்போது திருமணம் ஆகாதவர்களும் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. திருமணமாகாதவர்கள், கணவன் அல்லது மனைவியை இழந்தவர்கள், விவாகரத்து பெற்றவர்கள் உள்ளிட்டோர் இனி குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
30 வயதில் இருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆதரவற்ற இல்லங்களில் இருந்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு பிறகு 6 வயது வரை நிரம்பிய குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்த அறிவிப்பு குழந்தைகளை தத்தெடுப்போருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அனைத்து தரப்பினருமே குழந்தைகளை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் இருந்து அதிக குழந்தைகள் தத்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : 100 நாள் வேலைத்திட்டம்…!! தமிழ்நாட்டில் 6,19,310 பேர் நீக்கம்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!