இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஆவணங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக குடும்ப அட்டை எனப்படும் ரேஷன் கார்டு உள்ளது. அரசின் பல நலத்திட்ட உதவிகளை பெற இந்த அவசியமான ஒன்றாக உள்ளது. அன்றாட உணவு பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு ஆகியவற்றை மாதம் மாதம் நியாய விலைக்கடையில் குறைந்த விலையில் பெற்று கொள்ளலாம். மாநில அரசுகள் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஸ்மார்ட் கார்டு பயன்பாடு வந்ததில் இருந்து அனைத்தும் டிஜிட்டலுக்கு மாறி விட்டது. எஸ்.எம்.எஸ் அனுப்புவது, பயோமெட்ரிக் என அனைத்தும் டிஜிட்டல் மயமாகி விட்டது.

இந்தநிலையில், பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டப் பயனாளிகளுக்கு அவர்களின் உரிமைகள் பற்றிய தகவல்களை வழங்க ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று மேரா ரேஷன் 2.0 செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தூரத்தை குறைக்க பொது விநியோக சங்கிலியின் வழித்தட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதுள்ள கிடங்குகள், நியாய விலைக் கிடங்குகளின் உள்கட்டமைப்பு வசதிகளை உகந்த முறையில் பயன்படுத்துவதை இந்த ஆய்வு உறுதி செய்கிறது.

அந்தவகையில், ரேஷன் அட்டையில் புதிய உறுப்பினர்களை சேர்க்க இனி அலையத் தேவையில்லை. அதாவது வீட்டில் இருந்தவாறே மொபைலில் இந்த ஆப்பை பதவிறக்கம் செய்து நாமே பெயரை சேர்த்துக்கொள்ளலாம். இதற்கு MERA RATION 2.O என்ற செயலியை ப்ளே ஸ்டோரில் டவுன் லோடு செய்யுங்கள். பின்னர் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பரை பயன்படுத்தி உள்நுழைந்து, family details என்பதை கிளிக் செய்யவும். அதில், Add New Number – ஐ தேர்வு செய்து புதிய நபரை இணைக்கலாம். இதை தவிர ரேஷன் புதுப்பிப்பு, ரேஷன் ரசீது தகவல்களையும் பார்க்கலாம்.

Readmore: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10000 கன அடியாக சரிவு!. காவிரி டெல்டாவுக்கு நீர் திறப்பு அதிகரிப்பு!