கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே விபத்தை ஏற்படுத்திய காவலர் கைது செய்யப்பட்டார். கோவில்மேடு கிராமத்தைச் சேர்ந்த முகமது அன்சாரி மற்றும் நூருல் ஆலிம் ஆகிய இருவரும் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். எதிரே வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. மேலும், சம்பவம் குறித்து உறவினர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். மேலும், புகாரின் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த உயிரிழந்தவர்களின் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, போலீசார் விபத்து ஏற்படுத்திய மணிகண்டன் காவலர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறி தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Read More : கருணை காட்டாத விநாயகர்..? கேள்விக்குறியாகும் வாழ்க்கை..!