மும்பையில் 2 வயது பெண் குழந்தையை 19 வயது கள்ளக்காதலனுக்கு இறையாக்கிவிட்டு நடகமாடிய கொடூர தாயின் செயல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை மல்வானி பகுதியை சேர்ந்தவர் ரீனா ஷேக் (30). கணவரை பிரிந்து வசித்து வரும் இவருக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில், 19 வயது பர்கான் ஷேக் என்ற இளைஞருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்துவந்துள்ளார். இதனால் அடிக்கடி தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்துவந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று பர்கான் ஷேக் இரண்டு வயது குழந்தை எனும் பாராமல் அவரை கொடூரமாக பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் குழந்தை மூச்சுச்திணறி பரிதாபமாக உயிரிழந்தது.
மேலும் அந்த குழந்தைக்கு நடந்த கொடுமையை தாய் ரீனா வேடிக்கைப்பார்த்து கொண்டிருந்ததாகவும், இதையடுத்து மயங்கிய குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனையில், குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி ஒன்றும் தெரியாதது போல நாடகமாடியுள்ளார். இதையடுத்து மருத்துவர்களின் பரிசோதனையில் இறந்துவிட்டதாக தெரியவந்தது. மேலும் பிறப்புறுப்பில் ரத்த காயம் இருந்ததையடுத்து குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து ரீனாவிடம் போலீசார் நடந்தியதில் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.