மகனை காதலித்ததால் சிறுமியை கண்டித்த தாயை திருநங்கைகள் ஒன்று சேர்ந்து ஆடைகளை கிழித்து நடுரோட்டில் தள்ளி கொடூரமாக தாக்கிய சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம், களக்காடு பகுதி கக்கன் நகரில் கணவர் மற்றும் இரு மகன்களை பிரிந்த பெண் ஒருவர் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், கேரளாவில் பணிபுரியும் தனது மகன் புவனேஸ்வரனை, அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த அப்பெண், அச்சிறுமியை தனியாக அழைத்து கண்டித்ததுடன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சிறுமி, அந்த சம்பவத்தை திருநங்கையான அண்ணன் இசக்கி பாண்டியிடம் கூறியுள்ளார். இதனைத் கேட்டு ஆத்திரமரைடந்த இசக்கி பாண்டி, குலசேகரப்பட்டினத்தில் இருந்து தனது நண்பர்களான திருநங்கைகளை வரவழைத்துள்ளார்.

இதையடுத்து, நண்பர்களுடன் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்ற இசக்கிப் பாண்டி, தகராறில் ஈடுபட்டு உள்ளனர். பின்னர், ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணை கம்பால் சரமாரியாக அடித்து தாக்கியுள்ளனர். மேலும், பெண்ணின் உடைகளைக் கிழித்து, தரதரவென நடுரோட்டில் இழுத்து சென்று தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தை அவ்வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து தாக்குதலுக்குள்ளான பெண் அளித்த புகாரின் பேரில், தலைமறைவாக உள்ள திருநங்கைகள் இசக்கி பாண்டி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை கட்டாயப்படுத்தி தன்னிடம் சமாதானமாக போகுமாறு கையெழுத்து வாங்கியதாகவும் அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

Readmore: ”உங்களுக்காக ஆண்டாண்டு கால மரபை மாற்ற முடியாது”..!! ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் இதை பின்பற்றியே ஆகணும்..!! ஆர்.என்.ரவிக்கு எதிராக சீறிய விஜய்..!!