அரசிராமணி குஞ்சாம்பாளையம் நாச்சம்பட்டி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

சேலம் மாவட்டம் அரசிராமணி குஞ்சாம்பாளையம் நாச்சம்பட்டி பகுதியில் புதிதாக ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலய திருப்பணிகள் முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக காவிரி ஆற்றுக்கு சென்று பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து மங்கள இசை, விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, பாலிக பூஜை, புதிய திருவுருவ சிலைக்கு கண் திறந்து விமான கோபுர பிரதிஷ்டை, மூலவர் பரிவார மூர்த்தி கள் யாந்திர ஸ்தானம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடைபெற்றது.

இதனையடுத்து, ஸ்ரீ பாலசுப்பிரமணியர் விமான கோபுரம் மூலவர் பரிவார மூர்த்திகளுக்கு சிவாச்சாரியார்கள் புனித தீர்த்தம் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், கோவில் வளாகத்தில் திரளாக குவிந்த பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டு மகா அபிஷேக பூஜை அன்னதானம் நடைபெற்றது. இதில் அரசிராமணி குஞ்சாம்பாளையம் நாச்சம்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Read More : ’டேய் மச்சா.. போலீஸ் டா’..!! வாகன சோதனைக்கு பயந்து எதிர்திசையில் பைக்கை ஓட்டிய இளைஞர்கள்..!! லாரி மோதி படுகாயம்..!! எடப்பாடியில் ஷாக்..!!