சேலம் பெரியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆளுநர் ரவிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழக 23-வது பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்ந்துகொண்டார். அவரை சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தலைமையில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வரவேற்றனர். உயர்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்த விழாவில், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ள 288 பேருக்கு பட்டச் சான்றிதழை வழங்கினார். மேலும், பெரியார் பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் முதுநிலை மற்றும் இளங்கலைப் பாடங்களில் முதலிடம் பிடித்த 107 மாணவ மாணவிகளுக்கு தங்கப் பதக்கத்துடன் கூடிய பட்டச் சான்றிதழையும் வழங்கினார்.

முன்னதாக, மத்திய அரசின் விக்சிட் பாரத் திட்டத்தை பெரியார் பல்கலைக்கழக நிதியில் பரப்புரை செய்ய வந்ததாக ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி, பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

Readmore: ஷாக்!. எகிறிய தங்கம் விலை!. ரூ.57 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம்!.