இரத்த அழுத்தம், அதனை தொடர்ந்து வரும் பக்கவிளைவுகளும் இன்றைய இளைஞர்களையும் விட்டு வைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக இன்றைய இளைஞர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவது கவலை அளிக்கிறது. பெரும்பாலான நோய்களுக்கும் முக்கிய காரணம் வகிக்கும் இதை தவிர்ப்பது அவசியம் அதை முறையான வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் காக்க முடியும். தங்களது வாழ்க்கை முறையில் ஆழ்ந்த சுவாசம், உடற்பயிற்சி, தியானம், சரியான உணவு, பொழுதுபோக்குகள், சமூக உறவுகள், போதுமான தூக்கம் போன்றவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் மன அழுத்தத்தை குறைத்து நோயில்லா வாழ்க்கை முறையை பெறமுடியும்

அறிக்கையின்படி, இளைஞர்களும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவது கவலை அளிக்கிறது. பரிசோதிக்கப்பட்டவர்களில் 26% பேர் உயர் இரத்த அழுத்தம் மற்றும் 23% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது, மேலும் பலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது. இந்நிலையில் இவை தீவிரமாகாமல் தடுக்க இளைஞர்கள் தங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதுகாக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பது அவசியம். குறிப்பாக மன அழுத்தத்தை குறைத்தாலே நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் இரண்டையும் தடுத்துவிடலாம்.

உயர் இரத்தம் அழுத்தம், இதயம் உடலுக்கு இரத்தத்தை செலுத்தும்போது இரத்த நாளங்களில் ஏற்படும் அதிகப்படியான அழுத்தம் காரணமாக இது நிகழ்கிறது. இந்த அழுத்தம் நீண்ட நேரம் நீடித்தால், அது இதயம், சிறுநீரகங்கள், மூளை மற்றும் கண்களைப் பாதிக்கும். பெரும்பாலும் இதன் அறிகுறிகள் ஆரம்பத்தில் தெளிவாக இருக்காது. ஆனால் அவை மனிதர்களின் உயிரை வங்கக் கூடியது. இரண்டு வகையான உயர் இரத்த அழுத்தங்கள் இருக்கின்றன. முதல் அழுத்தம் நம் தவறான பழக்கங்களால் ஏற்படுகிறது. இரண்டாம் வகை சில நோய்கள் மருநந்துகளால் ஏற்படுகிறது.

காரணங்கள்: மேலும் உணவில் அதிக உப்பு சேர்ப்பது, உடல் பருமன், மன அழுத்தம், புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் உடல் உழைப்பு இல்லாமை ஆகியவை இரத்த அழுத்தம் அதிகரிப்புக்கான காரணங்களாக இருக்கலாம். இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறை மிகவும் முக்கியம்.

தவிர்ப்பது எப்படி ? உயர் இரத்த அழுத்த தினம் மருந்து மட்டுமல்ல, ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் முக்கியம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது, அதாவது உப்பு குறைவாக சாப்பிடுவது, தினமும் உடற்பயிற்சி செய்வது, மன அழுத்தத்தைக் குறைப்பது மற்றும் வழக்கமான சுகாதார பரிசோதனைகளை மேற்கொள்வது போன்றவை. எவ்வளவு விரைவில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறோமோ அவ்வளவு நல்லது. வழக்கமான உடற்பயிற்சியும் மிகவும் முக்கியம். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், யோகா அல்லது நீச்சல் போன்ற செயல்களைச் செய்யுங்கள். இவை உடலில் நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்கவும், கெட்ட கொழுப்பை (LDL) குறைக்கவும் உதவுகின்றன.

Readmore: 2-வது திருமணம் செய்து கொண்ட தந்தை..!! சொத்தில் பங்கு கேட்டு மாமனாரை கத்தியால் குத்திய மருமகன்..!! பெற்ற மகளே உடைந்தையாக இருந்ததால் அதிர்ச்சி..!!