தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஆதார் அட்டை போலவே, தனி அடையாள அட்டைக்கு பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அனைத்து விவசாயிகளுக்கும் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் விவசாய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் அரசிராமணி குள்ளம்பட்டி வி.ஏ.ஓ. அலுவலகத்தில் விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்குவதற்கான விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது. எனவே, அனைத்து விவசாயிகளும் தவறாமல் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அடையாள அட்டை எண் ஏன் அவசியம்..?
உங்களுக்கு நிலம் இருக்கிறது, விவசாய தொழில் செய்து வருகிறீர்கள் என்றால், கட்டாயம் உங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். உங்கள் நிலத்திற்கான ஒரு புதிய அடையாள எண்ணை பெற்றுக்கொள்வது அவசியமாக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டை எண் இருந்தால் மட்டும் தான், இனி வரும் காலங்களில் அரசு வழங்கும் அனைத்து சலுகைகளையும் பெற முடியும்.
எதன் அடிப்படையில் அடையாள அட்டை கிடைக்கும்..?
விவசாயிகளின் ஒப்புதலுக்கு பிறகே, அவா்களது தரவுகள் சேகரிக்கப்பட்டு அடையாள அட்டை எண் வழங்கப்படும். மத்திய, மாநில அரசுகள் வழங்கும் திட்டங்கள் அனைத்தும் இந்த தரவுகளின் அடிப்படையில் தான் வழங்கப்படும்.
என்னென்ன ஆவணங்கள் தேவை..?
* ஆதாா் எண்
* பட்டா/சிட்டா
* ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பர்