நாம் இன்னும் காணாத, கண்டுபிடிக்காத இடங்களில் இன்றளவும் பல பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதிலும், யானோமமி எனும் இனத்தை சேர்ந்த மக்கள் மத்தியில் இருக்கும் சடங்குகள் சற்று வினோதமானது. அதுகுறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பொதுவாக ஒருவர் இறந்துவிட்டால், அவரவர் கலாச்சாரம் சார்ந்த பல வகையான சடங்குகள் செய்யப்படும். ஆனால், பிரேசில் மற்றும் வெனிசுலா பகுதிகளில் வாழ்ந்து வரும் யானோமமி எனும் பழங்குடியினர் மிகவும் வினோதமான முறையில் இறந்தவர்களுக்கு சடங்கு செய்து வருகின்றனர். யாரேனும் இறந்து விட்டால், அவர்களை புதைப்பது அல்லது எரிப்பதை மட்டுமே நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், யானோமமி இனத்தில் யாரேனும் இறந்துவிட்டால், அவர்களின் உடலை எரித்து அந்த சாம்பலுடன் எலும்பு மற்றும் காய்கறிகளை சேர்த்து சூப் வைத்து குடிக்கின்றனர்.

மேலும், தங்கள் இனத்தை சேர்ந்தவர்களை மட்டுமே சாப்பிடுவதை பாரம்பரியமாக பின்பற்றி வருகின்றனர். தங்கள் இனத்தில் மரணம் என்பதே நடக்ககூடாது. அப்படி நடந்தாலும், அவர்கள் நம்முடன் தான் வாழ்கிறார்கள். இதனால் தான், இறந்தவர்களின் சாம்பல், எலும்புகளை சூப் வைத்து குடிப்பதாக கூறுகின்றனர். இதனால், இறந்தவர்கள் தங்களுடனே வாழ்வதாக யானோமமி மக்கள் நம்புகின்றனர்.

சிஎன்என் நியூஸ் 18 வெளியிட்டிருந்த செய்தியின்படி, மரணத்திற்கு பிறகு ஒருவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுமென்றால் அவர்களது உடல் எரிக்கப்பட்டு, இறந்தவர்களின் உறவினர்கள் அதனை சாப்பிட வேண்டும் என்பது வழக்கமாம். யாராவது இறந்துவிட்டால், சொந்தக்காரர்கள் ஒன்று கூடி அழுது பாட்டு பாடி, துக்கத்தை வெளிப்படுத்துவார்கள். பிறகு இறந்தவர்களின் முகங்களில் லேசாக மண்ணை தேய்த்து, பிணங்களை எரித்து விடுவார்கள்.

அடுத்ததாக, எரிந்த உடல்களின் சாம்பல் மற்றும் எலும்புகளை வாழைப்பழத்துடன் சேர்த்து, சூப் போல சமைத்து குடிப்பார்கள். அதுவும் இயற்கை மரணம் என்றால் அனைவருமே அந்த சூப்பை குடிக்க வேண்டும். ஒருவேளை கொலை செய்யப்பட்டு இறந்தால், பெண்கள் மட்டும் தான் அந்த பிணங்களை சாப்பிட வேண்டுமாம்.

படிக்க விசித்திரமாக இருந்தாலும், இது போன்ற நிகழ்வுகள் நமது உலகிற்கு ஒன்றும் புதியதல்ல. இன்றளவும் தொழில்நுட்பம் மற்றும் வெளியுலகம் தெரியாத பழங்குடியின மக்கள் ஏராளாமானவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மத்தியில் இன்றளவிலும் நாம் வினோதமாக காணும் பழக்கங்கள் நிறைய இருக்கின்றன.

Read More : ”எவன் கூட தொடர்பு வெச்சிருக்க”..? மனைவியின் தலையை சுவற்றில் அடித்துக் கொடூரமாக கொன்ற கணவன்..!! குடிபோதையில் வெறிச்செயல்..!!