ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை மூச்சுத் திணறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்டம் ஜஹாங்கிர்புரா பகுதியை சேர்ந்தவர் ஆயுஷ் லோதி, இவரது ஒன்றரை வயது குழந்தை ஆயுஷ். இந்தநிலையில், குழந்தைக்கு பெற்றோர்கள் ஜெல்லி மிட்டாயை கொடுத்துள்ளனர். எதிர்பாராத விதமாக குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மருத்துவர் கூறுகையில், மென்மையான உணவுப் பொருட்கள் மூச்சுக்குழாயை தடை செய்யும் அபாயம் உள்ளது. அதாவது உணவுகள் தொண்டையில் செல்வதற்குள் மூச்சுக்குழாய் மூடுவதற்கான, epiglottis என்ற பகுதி சரியாக வேலை செய்யாதபோது, இதுபோன்று மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற ஒரு சம்பவம் இனி நடக்கக்கூடாது என்றால் ஜெல்லி மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.