அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினா் அதிமுகவில் இணைந்தனா்.

சேலம் மாவட்டம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான சேலம் மாநகா் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளா் ஜெ.கே.வினோத், இணைச் செயலாளா் பூங்கொடி, துணைத் தலைவா் பரமேஸ்வரி உள்ளிட்டோர் அதிமுகவில் இணைந்து கொண்டனர்.

அதேபோல், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த சூரமங்கலம் பகுதி இணைச் செயலாளா்கள் திருமூா்த்தி, காவேரி, இணைச் செயலாளா் விசாலாட்சி, அவைத் தலைவா் இருசா கவுண்டா், எஸ்.பாலப்பட்டி ஊராட்சி செயலாளா் அருள்குமாா், துணைச் செயலாளா் அருள்முருகன் உள்ளிட்டோர் இணைந்து கொண்டனர்.

அதேபோல், திமுகவைச் சோ்ந்த சேலம் மத்திய மாவட்ட 23-வது வட்ட இளைஞரணி நிா்வாகி ரஞ்சித் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

Read More : செப்டம்பர் 5ஆம் தேதி வரை துவரம் பருப்பு, பாமாயிலை பெற்றுக்கொள்ளலாம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!