ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் மானிய விலையில் கிடைப்பதால், சாதாரண மக்கள் முதல் நடுத்தர வர்க்கத்தினரும் அங்கு உணவுப்பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். அத்தியாவசியத் தேவைகளான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்த பொருட்களை பெற குடும்ப அட்டை எனப்படும் ரேஷன் கார்டு முக்கியமானதாகும். வெங்காயம், தக்காளி விலை அதிகரித்தாலும் கூட இந்த ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் வெங்காயம், தக்காளியும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடைகள் மூலம் பொங்கல் பரிசு பொருட்கள், ரூ 1000 உரிமைத் தொகை, மிக்ஜாம் புயல் நிவாரணம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
இந்தநிலையில், தற்போது, ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் செயல்படும் ரேஷன் கடைகளை சிறு ஏடிஎம் மையங்களாக மாற்றுவதற்கான முயற்சிகளை தமிழ்நாடு கூட்டுறவு துறை மேற்கொண்டுள்ளது. அதன்படி நம் வங்கி கணக்கில் உள்ள குறிப்பிட்ட அளவிலான தொகைகளை இனி ரேஷன் கடைகளிலேயே எடுத்து கொள்ள முடியும். பயோமெட்ரிக் அங்கீகாரம் கொண்ட ஒரு டிஜிட்டல் கருவியானது ரேஷன் கடைகளில் நிறுவப்பட இருக்கிறது. இந்த கருவியின் மூலம் அடிப்படையான வங்கி சேவைகளை மக்கள் ரேஷன் கடைகள் வாயிலாகவே எளிதாக பெற்றுக் கொள்ள முடியும்.
Readmore: சங்ககிரி அருகே சூட்கேசில் இளம்பெண் உடல்!. சிதைந்த நிலையில் கண்டெடுப்பு!. போலீசார் தீவிர விசாரணை!