உங்கள் ரேஷன் கடையில் பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படவில்லை என்றால் அங்கிருந்தவாறே நீங்கள் ஒரு எஸ்எம்ஸ் மூலம் புகார் அளிக்கலாம்.

தமிழ்நாட்டில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்காக அரசு தரப்பிலிருந்து ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் போன்ற பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகிறது. இது தவிர மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கும் ரேஷன் கார்டு அவசியம். இதுதவிர பொங்கல் பண்டிகை தினத்தின்போது அரசு அறிவிக்கும் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படுகிறது.

இருப்பினும் சில ரேஷன் கடைகளில் தவறுகள் நடப்பதாக அடிக்கடி புகார்கள் எழுகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் உங்கள் ரேஷன் கடையில் பொருட்கள் முறையாக விநியோக்கிப்படவில்லை என்றால் அங்கிருந்தவாறே நீங்கள் ஒரு எஸ்எம்ஸ் மூலம் புகார் அளிக்கலாம். அதற்கு முன்பு, ரேஷன் கடையில் இப்போது இருப்பு இருக்கும் பொருட்களின் நிலவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் மொபைலில் இருந்து 9773904050 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாக, ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு கீழ் உள்ளவாறு டைப் செய்து அனுப்பவும். இந்த எஸ்எம்ஸ் மூலம் பொருட்களின் இருப்பு, கடை திறந்துள்ளதா இல்லையா? என்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

PDS <இடைவெளி> 101 – நியாய விலைக் கடையில் உள்ள பொருள் விவரங்கள்
PDS <இடைவெளி> 102 – நியாய விலைக் கடையின் நிலை (திறந்துள்ளது/மூடப்பட்டுள்ளது) PDS <இடைவெளி> 107 – கட்டண தொகை பற்றிய புகாருக்கு அதனை தெரிந்து கொண்ட பிறகு அதே எண்ணுக்கு எஸ்எம்ஸ் மூலம் உங்களின் புகாரை பதிவு செய்யலாம்.

அதுமட்டுமல்லாமல் நுகர் பொருள் வாணிப கழகத்தின் அதிகாரப்பூர்வ இணயதளப்பக்கத்துக்கும் சென்று ரேஷன் கடை தொடர்பாக உங்களுக்கு இருக்கும் புகாரை உரிய சான்றுகளுடன் பதிவு செய்யலாம். விற்பனையாளரின் நடத்தை அல்லது வேறு ஏதேனும் புகார் இருந்தால் கூட பயனாளியான நீங்கள் பதிவு செய்ய முடியும்.

Readmore: அதிர்ச்சியில் திமுக!. மூத்த தலைவர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு!. மருத்துவமனையில் அனுமதி!