விவசாய மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 23.55 லட்சம் விவசாய மின்இணைப்புகள் உள்ளன. தினசரி விவசாயத்திற்கு 18 மணி நேரமும், மற்ற இணைப்புகளுக்கு 24 மணி நேரமும் மின்விநியோகம் செய்யப்படுகிறது. பல கிராமங்களில் விவசாயத்திற்கென மின்விநியோகம் செய்யாத போதிலும், மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, அந்த வழித் தடங்களில் உள்ள வீடுகளில் குறைந்த மின்னழுத்த பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால், அடிக்கடி மின்சாதனங்கள் பழதடைவதாக கூறப்படுகிறது. எனவே, இனி விவசாயத்துக்கு மட்டும் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது..? என்பதை கண்டறிய ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மீட்டர் பொருத்தாமல் எந்தவொரு மின் இணைப்பும் வழங்கக் கூடாது என மாநில மின்வாரியங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஸ்மார்ட் மீட்டரை பொறுத்தவரை எந்த நேரத்தில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை துல்லியாக கணக்கிட முடியும். ஒவ்வொரு பிரிவிலும் எந்த நேரத்தில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது..? என்ற விவரத்தை தெரிந்து கொள்ள முடியும். அதற்கு ஏற்ப மின்னுற்பத்தி, மின்கொள்முதல் செய்ய திட்டமிட முடியும். விவசாய இணைப்புகளில் எப்போது அதிகமாக, குறைவாக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்ற விவரம் தெரிந்தால், அதற்கு ஏற்ப கூடுதல் திறனில் மின்சாதனங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : விவசாயிகளே 50% மானியம்..!! விவசாய நிலத்தை சுற்றி சோலார் மின்வேலி..!! சேலம் ஆட்சியர் சூப்பர் அறிவிப்பு..!!