பள்ளியின் செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்ததாக சொல்லப்படும் குழந்தையின் பெற்றோர் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது குழந்தை, பள்ளி செப்டிக் டேங்கில் விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த குழந்தையின் பெற்றோர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், “என் குழந்தையின் யூனிபார்மில் தண்ணீரே இல்லை. செப்டிக் டேங்கில் விழுந்திருந்தால் எப்படி உடை நனையாமல் இருந்திருக்கும்..? ஒரு இடம் கூட நனையவில்லை.

என் குழந்தையின் வலது கன்னத்தில் வீங்கிய நிலையில், காயம் இருந்தது. சீருடை, டை, ரிப்பனில் ரத்த கறை படிந்திருந்தது. என் குழந்தைக்கு எழுத தெரியும், ஆனால் படிக்கத் தெரியாது. இதனால், என் குழந்தையை டீச்சர் அடித்துள்ளார். இதில் தான் இறந்துள்ளார். ஆனால், இந்த விஷயத்தை மறைக்க குழந்தை செப்டிக் டேங்கில் விழுந்ததாக பொய் சொல்கிறார்கள். பள்ளிக்கு அருகிலேயே மருத்துவமனை இருக்கும்போது, இவர்கள் ஏன் காரில் தூக்கிச் சென்றார்கள்..? செப்டிக் டேங்கில் குழந்தையின் ஷூ இருந்ததாக கூறுகின்றனர். கம்பியை விட்டுதான் குழந்தையை மேலே தூக்கியதாக சொல்கிறார்கள். இதெல்லாம் நம்பும்படியாக இல்லை.

என் குழந்தையை பின் வாசல் வழியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அந்த செப்டிக் டேங்கின் சிறிய ஓட்டையில் எப்படி குழந்தை விழுந்திருக்கும்..? என்று அடுக்கடுக்கான கேள்விகளை குழந்தையின் பெற்றோர் முன்வைத்துள்ளனர். எப்போதும் என் மார்பிலேயே படுத்து தூங்குவாள்..! இனி நாங்கள் என்ன செய்வது..? என்று கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளனர்.

Read More : குரூப் 4 தேர்வெழுத போறீங்களா..? சேலத்தில் ஜனவரி 8ஆம் தேதி முதல் இலவச பயிற்சி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!