பிறந்த குழந்தை பராமரிப்பு என்பது குழந்தை பிறக்கும் முன்னரே ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். இதில் குழந்தைகளை வளர்ப்பது தொடர்பான அனைத்து குறிப்புகளும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளின் சுகாதாரம் மற்றும் அவர்களின் வளர்ப்பு தொடர்பான தேவையான தகவல்களைத் தெரிந்து கொள்வதன் மூலம், குழந்தையை பல வகையான பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றலாம். குழந்தைகளை வளர்ப்பது தாய்க்கு புதிய அனுபவம் ஆகும். இந்த மகிழ்ச்சியுடன், புதிய பொறுப்புகளும் வந்து சேரும். குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க பாக்டீரியா மற்றும் தொற்றுநோய்களிலிருந்து அவர்களைக் காப்பது அவசியம்.

இறுக்கமான டயப்பர் குழந்தைகளின் உடலுக்கு தேவையான காற்றோட்டத்தை தடுக்கும். குழந்தைகளின் சிறுநீர் நீண்ட நேரம் டைப்ரிலேயே இருந்தால் அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் குழந்தைகளுக்கு வலியையும் எரிச்சலையும் ஏற்படுத்தும், சிறுநீர்பாலையில் நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 24 மணி நேரமும் டயப்பரிலேயே சிறுநீர் கழிக்கும் குழந்தைகளால் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னர் சிறுநீர் வருவதை பெற்றோருக்கு உணர்த்த தெரியாது. அதேபோல் குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு முடிந்தவரை டயப்பர்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

Read More : 2025ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள்..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!