வாழப்பாடி அருகே, அதிவேகமாக சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து கர்நாடகா நோக்கி 7 பேருடன் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புதுப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியில் அதி வேகமாக கார் சென்றதாக கூறப்படுகிறது. இதில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அங்குள்ள பாலத்தின் இடதுபுற தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி பெரும் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 7 பேரில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 3 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கிரேன் வரவழைக்கப்பட்டு சேதமடைந்த காரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Readmore: “பகீர்..!! ஓடும் ரயிலில் பெண் செய்த அதிர்ச்சி சாகசம்..!! வைரலாகும் வீடியோ..!!”