அமெரிக்காவில் பேய், அமானுஷ்ய நிகழ்வுகளை ஆய்வு செய்து வந்த வாரன் தம்பதியினர் மிகவும் பிரபலமானவர்கள். இவர்கள் கையாண்ட பல உண்மைச் சம்பவங்களை வைத்து ‘கான்ஜூரிங்’, ‘அன்னாபெல்’, ‘நன்’ போன்ற ஹாரர் படங்கள் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றன. இந்தப் படங்களில் ‘அன்னாபெல்’ பொம்மை மிகவும் பிரபலமானது. இந்நிலையில், ‘ராகெடி ஆன்’ என்ற இந்த பொம்மைக்குள் ‘அன்னாபெல்’ என்ற சிறுமியின் ஆவி இருப்பதாக வாரன் தம்பதி நம்பினர். இந்தப் பொம்மை, வாரன் அமானுஷ்ய அருங்காட்சியகத்தில் கண்ணாடிப் பெட்டிக்குள் பத்திரமாக வைக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து, ‘அன்னாபெல்’ பொம்மை அமெரிக்காவின் பல மாநிலங்களுக்கு காட்சிக்காக எடுத்துச் செல்லப்பட்டது. அப்படி லூசியானா மாநிலத்திற்குக் கொண்டு சென்றபோது, அங்கு ஒரு தீ விபத்து ஏற்பட்டது. இதனால், “அன்னாபெல் பொம்மையைக் கொண்டு வந்ததால் தான் தீ விபத்து ஏற்பட்டது” என்று சமூக வலைத்தளங்களில் சிலர் பேச ஆரம்பித்தனர். இந்த நேரத்தில், “அன்னாபெல் பொம்மை திடீரென மாயமாகி விட்டது” என்ற வதந்தி காட்டுத் தீயாகப் பரவியது. இதனால் லூசியானா மக்கள் பயத்தில் உறைந்தனர். “என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை”, “பேய் பொம்மையை ஏன் நாடு முழுவதும் சுற்றுகிறார்கள்?” என்று மக்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், அமானுஷ்ய ஆய்வாளர் டான் ரிவேரா ஒரு வீடியோ வெளியிட்டு, “அன்னாபெல் பத்திரமாக இருக்கிறாள். அவள் எங்கும் செல்லவில்லை. அக்டோபர் 4-ஆம் தேதி இலினாய்ஸ் மாநிலத்திற்கு வர இருக்கிறாள். அவளைப் பார்க்க டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள்” என்று கூறினார். இதன்மூலம், அன்னாபெல் பொம்மை காணாமல் போகவில்லை என்பது உறுதியானது. டிக்கெட் விற்பனையை அதிகரிக்கவே இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்..

Read more வாவ்!. ரூ.199க்கு அதிவேக இண்டர்நெட் கிடைக்கும்!. இப்படியொரு சூப்பர் திட்டம் பற்றி தெரியுமா?. அதுவும் நம்ம தமிழ்நாட்டில்தான்!