தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு காரணமாக, அரசு மருத்துவமனைகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் தொடர் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சேலம் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பின் தற்போதைய நிலை கவலைக்குரியதாக உள்ளது. கடந்த மாதங்களில் பல புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால், தடுப்பு நடவடிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அதாவது சேலம் மாவட்டத்தில் டெங்கு பரவல் சற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சேலம் நகரம், மேட்டூர், ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2023ம் ஆண்டில் சேலம் மாவட்டத்தில் டெங்கு பரவல் மொத்தமாகவே 450 ஆக இருந்ததாகவும், ஆனால் தற்போது 280 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுப்பது தொடர்பாக உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளுடன் ஆட்சியர் பிருந்தாதேவி ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், ஆலோசனையின்போது பேசிய ஆட்சியர் பிருந்தா தேவி, வீடுகள், தொழிற்சாலைகள், பொது இடங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அகற்ற வேண்டும். பருவகால காய்ச்சலுக்கான தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.

தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் டெங்கு தடுப்பு நடைமுறைகளை கடைபிடிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளுதல் பொது இடங்களில் தூய்மைப் பணிகளை தீவிரப்படுத்துதல், மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Readmore: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்!. தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு!