தனது கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த அக்காவை, மகன்களுடன் சேர்ந்து தங்கை தீர்த்துக் கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம்‌ சேத்தியாதோப்பு அருகே சோழபுரம் பகுதியில், 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், வீட்டில் தனியாக அந்த பெண் மட்டும் வாழ்ந்து வந்தார். இவருக்கு ஒரு தங்கை இருக்கும் நிலையில், அவர் புவனகிரி பகுதியில் கணவருடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், தன்னுடைய மனைவியின் அக்கா கணவரை இழந்த நிலையில், அவருக்கு அவ்வப்போது தங்கையின் கணவர் உதவி செய்து வந்துள்ளார். இதன் காரணமாக இருவரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததால், இருவருக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இதனால், இவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்றும் இருவரும் தனிமையில் இருந்த நிலையில், தங்கையும் அவரது மகன்களும் வயலுக்கு சென்றுள்ளனர்.

அப்போது அந்த ஊரில் இருந்தவர்கள், உன் கணவர் அக்கா வீட்டில் இருப்பதாகவும், இருவருக்கும் கள்ளக்காதல் இருப்பதாகவும் போட்டுக் கொடுத்தனர். இதனால் உச்சக்கட்ட கோபமடைந்த தங்கை, தனது மகன்களுடன் அக்கா வீட்டிற்கு சென்றார். ஆனால், அதற்குள் கணவர் தப்பியோடிவிட்டார். பின்னர் தனது அக்காவிடம் எப்படி என் புருஷன் கூட உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி தகராறு செய்திருக்கிறார். மேலும், நீ உயிரோடு இருந்தால் தானே என் கணவருடன் தொடர்பு வைத்திருப்பாய் என்று கூறி தனது அக்காவை அவரும் அவரது மகன்களும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பின்னர் மூவரும் சேர்ந்து அந்த பெண்ணை சேலையால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்தப் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்த தங்கையையும், அவரது 2 மகன்களையும் கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.