ஆதார் அட்டை இருந்தால் ரூ.10,000 உடனடி கடன் பெறுவதைப் பற்றி பின்வருமாறு பார்ப்போம்.

இந்தியாவில் ஆதார் அட்டை என்பது முக்கியமான அடையாள ஆவணமாகும். பல முக்கிய செயல்களுக்கு இது தேவைப்படும். உதாரணமாக சிம்கார்ட் வாங்குதல், வங்கிக் கணக்கு ஆரம்பித்தல், அரசு நலத் திட்டங்களை பெறுதல் என பல வகைகளில் பயன்படுகிறது. இந்நிலையில், உங்கள் ஆதார் கார்டு வைத்து இப்போது ரூ.10,000 கடன் எளிதாக பெறலாம் என்ற புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. இது பற்றி பலருக்குத் தெரியாமலேயே உள்ளது.

இந்நிலையில், வங்கிகளும் NBFCகளும் ஆதார் அடிப்படையிலான கடன்களை வழங்கத் தொடங்கியுள்ளன. இந்த கடன் பாதுகாப்பற்றது என்பதால், எந்தவிதமான சொத்து உத்தரவாதம் தேவைப்படுவதில்லை. இது சம்பளம் வாங்கும் தனிநபர்களுக்கும் சுயதொழில் செய்பவர்களுக்கும் விரைவான நிதி ஆதாரமாக அமைகிறது. e-KYC மூலம், பணம் சில நாட்களுக்குள் கணக்கில் வரவு வைக்கப்படும்.

வயது வரம்பு மற்றும் தேவையான ஆவணங்கள் :

  • 1. இந்த கடன் பெற இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
  • வயது 21 – அதிகபட்சம் 65 வரை.
  • மாத சம்பளம் குறைந்தது ரூ.25,000 ஆக இருக்க வேண்டும்.
  • கிரெடிட் ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல்நிரந்தர முகவரி
  • ஆதார் அட்டை, பான், வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • ஆதார் அட்டை, பான் கார்டு / வாக்காளர் ஐடி / ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு விவரங்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கட்டாயம் தேவை.

விண்ணப்பிப்பது எப்படி?
ஆதார் மூலம் கடன் வழங்கும் நிறுவனத்தின் இணையதளத்திற்குச் செல்லவும். அல்லது App ஐ டவுன்லோட் செய்யவும். பிறகு தனிநபர் கடன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும். பின்னர் ஆதார் எண் மற்றும் தகவல்களை நிரப்பவும். பிறகு கொடுக்கப்படும் OTP மூலம் e-KYC ஐ நிறைவு செய்யவும். அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின், 2–3 நாட்களில் பணம் வங்கிக் கணக்கில் வரவு செய்யப்படும். இதையடுத்து, ஆதார் உங்கள் பான் மற்றும் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால், கூடுதல் ஆவணங்கள் தேவைப்படாது. ஆனால், ஏற்கனவே ஏதேனும் கடன் மோசடி புகார்கள் இருந்தால், இக்கடனுக்கு தகுதியில்லை .

Read more திடீரென டெலிவரி கட்டணத்தை உயர்த்திய அமேசான் நிறுவனம்..!! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!! இனி ஒவ்வொரு ஆர்டருக்கு எவ்வளவு செலுத்தணும் தெரியுமா..?