கள்ளக்காதலுடன் மனைவி ஓடியதால் வெளிநாட்டில் இருந்து பதறியடித்துக்கொண்டு ஓடிவந்த கணவன், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே கொன்னக்குழிவிளை பகுதியைச் சேர்ந்தவர் பெஞ்சமின்(47). வெளிநாட்டில் வேலை செய்து வரும் இவருக்கு சுனிதா என்ற மனைவி உள்ளார். திருமணம் ஆகி 19 ஆண்டுகள் ஆகியும் இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், மனைவி சுனிதா மீது அளவுக்கடந்த பாசம் வைத்துள்ளார் பெஞ்சமின். வெளிநாட்டில் கொத்தனாராக இரவு பகலாக வேலை பார்த்து, அந்த வருமானத்தை மனைவிக்கு அனுப்பி வந்துள்ளார். அதன் ஒருபகுதியாக, கொன்னக்குழி விளையில் இருந்த தனது குடும்ப வீட்டை விற்று, தெற்கு மணக்காவிளையில் புதிதாக வீடு ஒன்றை கட்டியுள்ளனர்.
இந்தநிலையில், கடந்த சில நாட்களாக மனைவியின் நடத்தையில் சில மாற்றங்கள் தென்பட்டதால் சந்தேகமடைந்த பெஞ்சமின், அதுகுறித்து அவரிடம் விசாரித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, கடந்த சில நாட்களுக்குமுன்பு சுனிதா வீட்டை விட்டு திடீரென மாயமாகியுள்ளார். இருப்பினும் குடும்பத்தினர் மற்றும் உறவினர் அக்கம்பக்கதில் தேடியுள்ளனர் இருப்பினும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து வெளிநாட்டில் இருந்து பதறியடித்து ஓடிவந்த பெஞ்சமினும் மனைவியை பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். இருப்பினும் எந்த தகவலும் கிடைக்காததையடுத்து, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனால் விரக்தியில் இருந்த பெஞ்சமின் திடீரென கடந்த 28ம் தேதி விஷம் குடித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தற்கொலைக்குமுன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவரது வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், எஸ்பி அய்யா, 19 வருடங்களாக என் மனைவியை நான் ராணி மாதிரி வைத்திருந்தேன். ஆனால் அவள் கள்ளக்காதலனுடன் போய் விட்டார். கள்ளக்காதலனை விட்டு விடாதீர்கள். எனது மனைவி உறவினர், வக்கீல் ஒருவரும் என்னை மிரட்டினார்கள். ( என் சாவுக்கு காரணமான இவர்களுக்கு தூக்கு தண்டனை வாங்கித்தாங்க. அவனை விட்டு விடாதீங்க என்று அழுதபடி வீடியோ வெளியிட்டிருந்தார். இதையடுத்து தலைமறைவாக இருந்த மனைவி சுனிதா மணியன்குழி பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய 2 பேரை தேடி போலீசார் தேடி வருகின்றனர்.
Readmore: எடப்பாடி அரசு பள்ளியில் தேசிய கீதம் புறக்கணிப்பா?. தலைமை ஆசிரியர் கொடுத்த விளக்கம்!