பெங்களூரில் மனைவியை கொன்றுவிட்டு துண்டித்த தலையை ஸ்கூட்டரில் எடுத்த சென்ற கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் அனேக்கலில் இருந்து சந்தாபுரம் நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஸ்கூட்டரில் சென்ற ஒருநபர், ரத்த கறையுடன் செல்வதை கண்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்த நபரை துரத்திச்சென்று பிடித்து விசாரித்ததில் ஒரு பெண்ணின் துண்டித்த தலை இருந்தது. இதுகுறித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நபர் ஹீலாலிகே கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பது தெரியவந்தது.

விசாரணையில், இது எனது மனைவி, நானே கொலை செய்துவிட்டேன் என்றும் இதற்காக போலீஸில் சரணடைய சென்றதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். அதாவது, இந்த தம்பதிக்கு 3 வயதில் குழந்தை இருக்கும் நிலையில், மனைவி மானசாவுக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாகவும் இதனால் அவரை வீட்டை விட்டு வெளியேறும்படி கூறியதாகவும். ஆனால் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்கும்படி மானாசா கூறியதாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சங்கர், மானசாவை கோடாரியால் வெட்டிக்கொன்றது தெரியவந்தது. மேலும், மனைவியின் துண்டித்த தலையுடன் ஸ்கூட்டரில் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: “அவன்தான்டா இன்னைக்கு பெரிய வேலைய பாத்துட்டு போய்டான் ” ..!! மகன் வாங்கிய மதுவை திருடி குடித்த தந்தை..!! கடைசியில் பயங்கர ட்விஸ்ட்..!! சேலத்தில் அதிர்ச்சி..!!