நாட்டில் உள்ள அனைவருக்கும் ரேஷன் கார்டு என்பது அத்தியாவசியமாக உள்ளது. குறிப்பாக, ரேஷன் கார்டை வைத்து தான் அரசின் பல சலுகைகளை பெற முடியும். அந்த வகையில், புதிதாக ரேஷன் கார்டுக்கு எளிய முறையில் விண்ணப்பிப்பது எப்படி..? என்னென்ன ஆவணங்கள் தேவை..? என்று பல்வேறு சந்தேகங்கள் பலருக்கு இருந்து வருகிறது. இந்த கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் செய்தித் தொகுப்பை விரிவாக பார்க்கலாம்.

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி..?

* புதிய ரேஷன் கார்டுக்கு எளிய முறையில் நீங்களே விண்ணப்பிக்கலாம். ஆம், முதலில் https://www.tnpds.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

* அதில், முகப்புப் பக்கத்தில் உள்ள ஸ்மார்ட் கார்டு ஆப்ஷனைக் கிளிக் செய்தால், திரையில் ஒரு படிவம் தோன்றும்.

* அந்த படிவத்தில் அனைத்து தகவல்களையும் நிரப்பிய பின்னர், அதனுடன் அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

* நீங்கள் இணைக்கும் ஆவணத்தின் அளவு 1.0 MB அளவிலும், png, gif, jpeg, pdf ஆகியவற்றில் ஏதாவது ஒரு ஃபார்மெட்டிலும் இருக்க வேண்டும்.

* பின்னர், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், எரிவாயு இணைப்புகள் எத்தனை உள்ளது? போன்ற தகவல்களை வழங்க வேண்டும்.

* இதையடுத்து, ‘உறுதிபடுத்து’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதை கிளிக் செய்த பிறகு உங்களுக்கு ஒரு (Reference) எண் கிடைக்கும். அதை பத்திரமாகக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

* நீங்கள் சமர்பித்த ஆவணங்கள் மற்றும் விவரங்களை துறை சார்ந்த அலுவலர்கள் சரிபார்ப்பார்கள். சரிபார்ப்பு முடிந்ததும், உங்களுக்கான ரேஷன் கார்டு வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும்.

தேவையான ஆவணங்கள் :

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை, மின் ரசீது, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வருமான சான்றிதழ், வங்கி பாஸ்புக், சாதி சான்றிதழ் ஆகியவை தேவைப்படும்.

புதிதாக திருமணமானவர்கள் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க ஏற்கனவே உள்ள குடும்ப அட்டையில் தங்களது பெயரை நீக்கிவிட்டு, பின்னர் ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்து அப்டேட் செய்தபிறகு ஆதார் அட்டையை ஆவணமாக பயன்படுத்தி புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கலாம்.

Read More :

ஒரே வாலிபரை காதலித்த 2 மாணவிகள்..!! நடுரோட்டில் தலைமுடியை பிடித்து சண்டை போடும் பரபரப்பு வீடியோ..!!

உயிருக்கு போராடிய பெண்ணை சோளக்காட்டிற்குள் இழுத்துச் சென்று வன்கொடுமை..!! கையெடுத்து கும்பிட்டும் விடவில்லை..!! குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்..!!