எடப்பாடியில் ரூ.2000க்காக ஆணும், பெண்ணும் ஆடைகளை கிழித்து நடுரோட்டில் சண்டை போட்டுக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி – ஜலகண்டாபுரம் சாலையில் கால்நடை மருத்துவமனை பேருந்து நிறுத்தம் பகுதியை சேர்ந்தவர் சத்யா. இதேபோல், எடப்பாடியில் இயங்கிவரும் தனியார் வங்கியில் மணி என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், வங்கிக்கு சென்ற சத்யாவிடம், காவலாளி மணி ரூ.2 ஆயிரம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனை திருப்பித் தரும்படி சத்யா கேட்டு வந்துள்ளார். ஆனால், சில நாட்களாக மணி பணத்தை திருப்பிக்கொடுக்காமல் அலைக்கழித்தாக கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பவதன்று மணி பணிபுரியும் வங்கிக்கு சென்ற சத்யா, அங்கிருந்தவர்களிடம் கூறி பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.
ஆனால், தன்னிடமிருந்து தான் அந்த பெண் பணத்தை பறித்து கொண்டதாகவும், அதை தட்டி கேட்டபோது தனது ஆடைகளை உருவி விட்டதாகவும் மணி அருகில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார். இப்படி மாறி மாறி இருவரும் கூறிய நிலையில், ஆத்திரமடைந்த சத்யா மணியின் ஆடைகளை கிழித்துக்கொண்டு ஓடியுள்ளார். ஆடைகளை கேட்டு மணியும் அந்த பெண்ணின் பின்னாடியே ஓடியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலாளியும் அந்த பெண்ணின் புடவையை பிடித்து இழுத்து கிழித்து நடுரோட்டிலேயே இருவரும் வெகுநேரம் சண்டை போட்டுள்ளனர். இதனை அருகில் இருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி அமைதிப்படுத்தினர். இதையடுத்து, சாலை சென்றவர்கள் இவர்களை போட்டோ எடுத்து வைரலாக்கி வருகின்றனர்.