குஜராத்தில் உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு காதலி உயிரிழந்த சம்பவத்தில் இளைஞர் போலீசார் கைது செய்தனர்.

குஜராத் மாநிலம் சிக்லி தாலுகாவை சேர்ந்த இளம்பெண், கல்லூரியில் பயின்று வந்துள்ளார். இந்தநிலையில், சோஷியல் மீடியாவில் பழக்கமான இளைஞருடன், நட்பாக பழகி வந்துள்ளார். நாளடவையில் இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்து, அந்த பெண் கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து, இருவரும், ஓட்டலில் ரூம் எடுத்து அவ்வபோது உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

அதன்படி, சம்பவத்தன்றும் கல்லூரிக்கு செல்வதாக சென்ற இளம்பெண், இளைஞருடன் ஓட்டலில் உல்லாசமாக இருந்துள்ளார். உடலுறவின் போது அவருக்கு கடும் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. செய்வதறியாது தவித்த காதலன், ரத்தப்போக்கை நிறுத்த என்ன செய்ய வேண்டும்” என்று ஆன்லைனில் தேடியுள்ளார். இருப்பினும் சரியான பதில் கிடைக்காததால், பெண்ணுறுப்பில் துணியை வைத்து அழுத்தியுள்ளார். அப்போது இளம்பெண் மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து, நண்பர்கள் உதவியுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இதையடுத்து, இளம்பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியானது, அவரது அந்தரங்க பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும், அதன் விளைவாகவே அதிக ரத்த இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. பெண்ணுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்ட பிறகும்கூட, அவருடன் தொடர்ந்து உடலுறவு கொண்டிருக்கிறார் இளைஞர்.. இதில்தான் நிலைமை மோசமடைந்துள்ளது.

சிகிச்சை குறித்து ஆன்லைனில் கிட்டத்தட்ட 60 முதல் 90 நிமிடங்கள் செலவிட்டுள்ளார்.. “உடலுறவின் போது இரத்தப்போக்கு நிறுத்த என்ன செய்ய வேண்டும்” என்று தேடியிருக்கிறார். ஆனால் ரத்தப்போக்கு நிற்காததால், நிலைமை விபரீதமாகி கொண்டிருந்தது.. அதற்கு பிறகுதான், பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளார். வலியால் துடிக்கும் பெண்ணை அங்கேயே நிற்கவைத்துவிட்டு, ரூமில் இருந்த ரத்தக்கறைகளை சுத்தம் செய்துள்ளார்.. அதற்கு பிறகே அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். தாமதாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றதே இளம்பெண்ணின் உயிர் போனதற்கு காரணம் என்று விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இளைஞரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தால் பெண்ணை பறிகொடுத்த பெற்றோர், மரணத்திற்கு நீதி கேட்டு மருத்துவமனை முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Readmore: சேலத்தில் லாரி மோதி விபத்து!. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு நேர்ந்த சோகம்!. சாலையை கடக்க முயன்றபோது விபரீதம்!