தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 615 பணியிடங்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான (நேர்காணல் இல்லாத பதவிகள்) அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி மே 21-ம் தேதி அன்று வெளியிட்டது. இதில் உதவி பொறியாளர் (சிவில்), உதவி பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்), இளநிலை மின்ஆய்வாளர், வேளாண் அலுவலர் (விரிவாக்கம்), தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர், மீன்வள ஆய்வாளர், நூலகர் (கிரேடு-2), இளநிலை அறிவியல் அலுவலர், உதவி பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு), சமூக அலுவலர், உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-1) உள்ளிட்ட 47 விதமான பதவிகளில் 615 காலியிடங்கள் உள்ளன.

இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 27ம் தேதி தொடங்கி ஜூன் 25-ம் தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான (நேர்காணல் இல்லாத பதவிகள் ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. ஒவ்வொரு பதவிக்கும் ஏற்ப கலை அறிவியல் பட்டதாரிகள், பிஇ, பிடெக் பட்டதாரிகள், குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுகள் வரும் 04.08.2025 முதல் 10.08.2025 வரை நடைபெறும். தமிழ் தகுதி தேர்வு மற்றும் துறை சார்ந்த பாடப்பிரிவு கொண்ட எழுத்து தேர்வு நடைபெறும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். அதிகாரப்பூர்வ https://tnpsc.gov.in/Document/english/CTS%20-Non%20Interview%20English_.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH தளத்தில் தேர்வர்கள் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

Readmore: பெற்றோர்களே!. தொண்டையில் சிக்கிய ஜெல்லி மிட்டாய்.. ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!. மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சி காரணம்!