உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கல்விச் செலவினை அரசே ஏற்றுக்கொள்ளும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அயல்நாட்டு உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித்தொகை பெற்று சேரும் மாணவர்களின் முதல் பயணத்தொகையை அரசே ஏற்கும் என்றும் இதற்காக ஆண்டுதோறும் 6 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், “அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து நம் நாட்டில் செயல்பட்டு வரும் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்கும். நம் தமிழ்நாட்டு மாணவர்களை உலகம் போற்றும் அறிஞர்களாக உருவாக்க, இந்தியாவுக்கே முன்மாதிரியான பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சர் அவர்களுக்கு மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பெற்றோர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
Read More : மகுடஞ்சாவடியில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்யும் இளைஞர்கள்..!! விலை உயர்ந்த பைக்கில் ’வீலிங்’ சாகசம்..!!