சென்னை, கோவை உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழகங்களில் புதிதாக துவங்கிய, 130 சொகுசு மாநகர பேருந்துகளில், பெண்கள் இலவச பயண திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் மகளிருக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்தவகையில் மகளிர் உரிமைத் தொகை, பேருந்துகளில் இலவச பயணம் உள்ளிட்ட திட்டங்கள் பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதாவது நகர்புறங்களில் ஒயிட் போர்டு பேருந்துகளிலும், கிராமப்புறங்களில் நகர பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம். இதன் மூலம் தமிழகத்தில் ஏராளமான பெண்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது தமிழகப் போக்குவரத்து கழகம் நீல நிறப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று தற்போது அறிவித்துள்ளது. இந்த புதிய நீல நிற சொகுசு பேருந்துகள் சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்துகளிலும் இனி பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் 9000 நகர பேருந்துகளில் 7300க்கும் மேற்பட்ட சாதாரண கட்டண பேருந்துகளில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. சென்னையில் 1559 சாதாரண கட்டண பேருந்துகளில், பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பேருந்துகள், ‘மகளிர் விடியல் பயணம்’ என பெயரிடப்பட்டு இருக்கும். இந்த வகை பேருந்து சேவை துவங்கிய போது, சொகுசு பேருந்துகளாக இயக்கப்பட்டன. தற்போது, சாதாரண கட்டண பேருந்துகளாவே இயக்கி வருகிறது.

சென்னையை போல, கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழகங்களிலும், நீல நிற டவுன் பேருந்துகளில் கணிசமான அளவுக்கு, ‘மகளிர் விடியல் பயண பேருந்துகள்’ இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், சிவப்பு நிற சொகுசு மற்றும், ‘ஏசி’ வகை பேருந்துகளில், பெண்கள் இலவச பயண திட்டம்விரிவுப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: OTP மூலம் அரங்கேறும் மோசடி..!! வங்கிக் கணக்கில் இருந்து பணம் பறிபோகும் அபாயம்..!! தப்பிப்பது எப்படி..?