ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு மாதந்தோறும் மின்கட்டணம் வசூலிப்பது விரைவில் அமலுக்கு வரும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், மின்சார வினியோக நிலவரம் குறித்து, மின் வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது பேசிய அவர், ”கடந்த ஆண்டு கோடையில் மின் தேவை 20,830 மெகா வாட்டாக அதிகரித்தது. இந்தாண்டு 22,000 மெகா வாட்டாக உயரும் என கணக்கிட்டுள்ளோம். அதை, தடையின்றி பூர்த்தி செய்வோம்,” என்றார்.
மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின்படி, “மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கெடுப்பை, விரைவாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விரைவில் அது அமலுக்கு வரும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதும், மாதாந்திர கணக்கெடுப்பு நடைமுறைக்கு வரும். இது விரைவில் உறுதியாக கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டது. நாம் எதிர்பார்த்த குறைந்த விலைப்புள்ளி கிடைக்கவில்லை. எனவே, அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. புதிய டெண்டர் கோரப்படும். வோல்டேஜ் பிரச்னை ஏற்படும் இடங்களில் 5,407 டிரான்ஸ்பார்மர்கள் அமைத்துள்ளோம். மேலும் 1,129 நிறுவப்படும். 2,000 மெகா வாட் சூரியசக்தி மின்சாரத்தை சேமிக்கும் ‘பேட்டரி ஸ்டோரேஜ்’ அமைக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.
Readmore: எடப்பாடி| கோயில் நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்கள்!. தர்மகர்த்தா வீட்டிலேயே கைவரிசை!. தீவிர விசாரணை!