எடப்பாடியில் இருவேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்து வந்த வடமாநிலத்தை சேர்ந்தவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம், டோஸ்டி பகுதியை சேர்ந்த ஜாலுராம், இவர் எடப்பாடி வெள்ளாண்டிவலசு பகுதியில் குடியிருந்து வருகிறார். இவர், ஸ்கூட்டியில் குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைய-டுத்து, நேற்று எடப்பாடியில் இருந்து சங்ககிரி செல்லும் போது, செட்டிஏரி பகுதியில் ஜாலுராமை எடப்பாடி போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஸ்கூட்டியில் கூல்லிப், வி1, ஹான்ஸ், ஆர்.எம்.டி., உள்ளிட்ட, 34 கிலோ அளவுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, ஸ்கூட்டியை பறிமுதல் செய்ததோடு, ஜாலுராமை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், தேவூர் அரசிராமணி செட்டிப்பட்டி, ஓலப்பாளையம் பகுதிகளில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்துவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சங்ககிரி சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் தேவூர் சப் – இஸ்பெக்டர் அருண்குமார் உள்ளிட்டோர் ஓலப்பாளையம் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடக்கிறதா என சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அரசிராமணி மேற்கு ஓலப்பாளையம் பகுதியில் ரமேஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.