ஒவ்வொருவரும் வாஸ்துபடி வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள். வாஸ்து படி வீட்டை கட்டாவிட்டால், பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. எனவே வாஸ்து மிகவும் முக்கியமானது என்று கூறலாம். வாஸ்து சாஸ்திரத்தில் திசைகள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே, ஒரு வீட்டை கட்டும்போது அல்லது ஏதேனும் ஒரு பொருளை வைக்கும்போது, திசைகளின்படி முடிவு செய்கிறோம். இது நமக்கு நன்மை தரும் என்று நம்புகிறோம்.
வாஸ்து உங்கள் வீட்டிற்கும் உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் பலத்தையும், மகிழ்ச்சியையும் தருகிறது. நீங்கள் நேர்மறை மற்றும் பொருளாதார வளர்ச்சியை வ்பிரும்பினால், நீங்கள் வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்ற வேண்டும். அதாவது நாம் வசிக்கும் இடத்தில் உள்ள பொருட்களின் அமைப்பு, அதன் ஆற்றல் ஓட்டத்தில் செல்வாக்கு செலுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வாஸ்து வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு அறையையும் இடத்தையும் ஒழுங்காக பேண வேண்டும்.
நம் வீட்டில் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருளும் நம் வாழ்க்கையை பாதிக்கிறது. குறிப்பாக, எதிர்மறையான சில விஷயங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி நாம் பல விதிகளை பின்பற்ற வேண்டும். முக்கியமாக நாம் சில விஷயங்களை காலியாக விடக்கூடாது. நீங்கள் வீட்டில் ஒருபோதும் காலியாக வைக்கக் கூடாத பொருட்கள் என்னவென்று தெரியுமா?
அரிசி: இந்து சமயத்தில் உணவை தெய்வமாக கருதுகின்றனர். அதிலும் குறிப்பாக அரிசி மிக முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. அதன் காரணமாக ஒவ்வொருவரின் வீட்டிலும் அரிசி பாத்திரத்தை ஒருபோதும் காலியாக வைக்கவே கூடாது. அது முழுமையாக காலியாவதற்கு முன் அதை நிரப்புவது முக்கியம் என வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அது மட்டுமல்லாமல் வீட்டில் அரிசி, தானியங்கள் தீர விட வேண்டாம். அதனால் வீட்டில் அதிர்ஷ்டம், செல்வ நிலை குறையும் என நம்பப்படுகிறது.
வாஸ்து சாஸ்திரத்தின் படி குளியல் அறையில் ஒருபோதும் வாளியில் நீரை காலியாக்கி வைக்க வேண்டாம். இதனால் வீட்டில் எதிர்மறை சக்திகள் நிரம்பும். அதனால் நீங்கள் குளிப்பது அல்லது துவைத்த பின்னர், அந்த வாளியில் சிறிது நீரைப் பிடித்து வைப்பது நல்லது. இதன் காரணமாக உங்கள் வீட்டில் நிதி நெருக்கடிகள் குறையும் என நம்பப்படுகிறது.
ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய முக்கிய விஷயம் சேமிப்பு. அதிலும் குறிப்பாக நீங்கள் வைத்திருக்கக் கூடிய பணப்பையில் குறைந்த பட்சம் ஓரிரு ரூபாய் நோட்டுகளையாவது வைத்திருப்பது நல்லது. உங்கள் பர்ஸில் உள்ள பணத்தை முழுவதுமாக செலவு செய்து விட வேண்டாம். அது மட்டும் இல்லாமல் உங்களுடைய பரிசில் கோவரி, கோமதி சக்கரம் அல்லது சங்கு கூட வைத்திருக்கலாம். இப்படி செய்வதன் மூலம் உங்களின் நிதிநிலை சிறப்பான முன்னேற்றம் அடையும்.
பூஜை அறையில், இறைவனுக்காக வைக்கக்கூடிய தண்ணீர் பாத்திரத்தில் ஒருபோதும் தண்ணீர் காலியாக விடுவோ அல்லது, தண்ணீர் இல்லாமல் வைப்பது கூடாது. நீங்கள் எப்போதெல்லாம் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுகின்றீர்களோ அப்போதெல்லாம், அந்த சிறிய தண்ணீர் வைக்கக் கூடிய பாத்திரத்தை விளக்கி மீண்டும் நீரை நிரப்பி வைத்து வழிபாடு செய்யவும். அதேபோல உங்கள் வீட்டில் தண்ணீர் பிடித்து வைக்கக்கூடிய குடங்களும் முழுவதுமாக நீர் காலியாகும் வரை விட வேண்டாம். வீட்டில் ஓரிரு குடங்களில் தண்ணீர் எப்போதும் இருக்கும் வகையில் பராமரிப்பது நல்லது. இல்லையெனில் உங்கள் வீட்டில் நிதி நெருக்கடியைச் சந்திக்க வாய்ப்புள்ளது.
நாம் பேசக்கூடிய வார்த்தைகளுக்கு மிகப் பெரிய சக்தி உண்டு. அது ஒருவரை ஆக்கவோ அல்லது அழிக்கவும் கூடிய வல்லமை உள்ளது. அதனால் எப்போதும் இனிமையான வார்த்தைகளை மட்டுமே பேசுவது அவசியம். வீட்டில் உள்ள பெரியவர்களை மனம் புண்படும்படி ஒருபோதும் பேசக்கூடாது. இதனால் மகாலட்சுமியின் அருள் கிடைக்காமல் போகும்.