குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையில் மாமனாரை மருமகன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் வண்டரந்தாங்கலை அருகே ராஜூ (வயது 48), இவரின் மகள் அர்ச்சனா (20) மற்றும் மகளின் கணவர் ராஜ்குமார் (27) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு அர்ச்சனாவின் தாய் இறந்ததால், ராஜூ இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இதனால் மகளுக்கும், தந்தைக்கும் இடையே பல பிரச்சனை ஏற்பட்டது. தனது தாய்க்குச் சொந்தமான சொத்தை, தனக்கு பிரித்து தர வேண்டுமென அடிக்கடி அர்ச்சனா சண்டை போட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று அர்ச்சனா தளத்தில் துணி துவைத்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த ராஜூ திடீரென சறுக்கி கீழே விழுந்தார். இதனால், அர்ச்சனாவுக்கும், ராஜுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அர்ச்சனா மற்றும் ராஜ்குமார் இருவரும் கோபத்தில் ராஜூவின் தலையில் கத்தி மற்றும் கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் ராஜூ காயமடைந்தார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் உடனே அவரை மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ராஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : கரண்ட் பில் விவகாரத்தில் கடுப்பான மின்வாரிய ஊழியர்கள்..!! திடீரென மின் இணைப்பை துண்டித்ததால் அடுத்தடுத்து இறந்துபோன 14,000 கோழிகள்..!!