வரதட்சணை கேட்டு குடும்பமே துன்புறுத்திய நிலையில் கர்ப்பிணி பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபாலன். இந்தநிலையில், கல்லூரியில் படிக்கும்போது ஜெனிபர் என்ற இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இருப்பினும், படிப்பு முடிந்தபின், இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டு ஜெயபாலனின் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களது திருமணத்தின்போது இளம்பெண்ணுக்கு 25 சவரன் வரதட்சணை கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது கர்ப்பிணியாக உள்ள ஜெனிபரை வரதட்சணை கேட்டு ஜெயபாலனின் தாய், சகோதரி என மொத்த குடும்பமும் அவ்வபோது துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில், திடீரென ஜெனிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவலறி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெனிபரின் உறவினர், மரணத்திற்கு நியாயம் வேண்டும் என போராட்டம் நடத்தினர். இதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்துவதாக வாக்குறுதி அளித்தனர். இந்தநிலையில், வீட்டில் நடக்கும் சில சம்பவங்கள் குறித்து ஜெனிபர் தன் தங்கையிடம் ரகசியமாக கூறி வந்துள்ளார்.
இது குறித்து பேசிய ஜெனிபரின் தங்கை, ஜெயபாலனின் தாய் சின்னம்மாள், ஜெனீபரை அவ்வப்போது வாக்குவாதம் செய்து சண்டையிட்டு இருக்கிறார். துடைப்பத்தால் தன்னை அடிப்பதாகவும், அதனை கணவர் வேடிக்கை பார்த்ததாகவும், தனக்கு ஆதரவாக அவர் பேசவில்லை என கூறி இருக்கிறார். எதற்கெடுத்தாலும் அழகில்லை, நிறமில்லை, பணமில்லை என சின்னம்மாள் அவதூறு பேசி வந்துள்ளார். ஜெயபாலன் அவ்வபோது போதையில் வீட்டிற்கு வருவதாகவும் கூறியுள்ளார்.
25 சவரன் நகை போட்டு கட்டிக்கொடுத்த நிலையில், மேலும் 25 சவரன் நகை வாங்கி வா என கூறி துன்புறுத்தி ஜெனிபரை கொலை செய்து தூக்கில் சடலமாக தொங்கவிட்டுள்ளனர் என உறவினர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் கொலையா, தற்கொலையா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Readmore: வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணம் இந்த 3 வைட்டமின்களின் குறைபாடு!. எவ்வாறு தடுப்பது?