வீட்டு மின் கட்டண உயர்வு மற்றும் இலவச மின்சார சலுகைகள் குறித்து அமைச்சர் சிவசங்கர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஜூலை 1ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்படும் என தகவல் வெளியாகி வந்தது. ஆனால், இந்த தகவலுக்கு தமிழ்நாடு அரசு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNEB Regulatory Commission) இதுவரை வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின் கட்டண உயர்வும் செய்யப்படவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், வீட்டு மின் நுகர்வோருக்கு தற்போது வழங்கப்படும் இலவச மின்சார சலுகைகள் தொடர வேண்டும் என்றும், எந்தவித கட்டண உயர்வும் வர வேண்டாம் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருப்பதாக அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். எனவே, தற்போதைய நிலவரப்படி வீட்டு மின் கட்டணங்களில் மாற்றம் எதுவும் இல்லை, அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடர்கின்றன.

Read More : போலீஸே இப்படி பண்ணுனா எப்படி?. பாதுகாப்பு பணியின்போது வீடுபுகுந்து இளம்பெண்ணிடம் அத்துமீறல்!. மீனவ கிராமத்தில் பரபரப்பு!